திடீரென மாயமான இலங்கை தமிழ்ப்பெண் – பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

தமிழகத்தில், திருமணமான இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை முகாமில் வசிப்பவர் ஜெயரூபா. இவரது மகள் சுமித்திரா (28). சுமித்திராவுக்கும் அதே முகாமைச் சேர்ந்த பத்தி நாதன் (33) என்பவருக்கும் திருணமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 5 ஆண்டுகளாக தனது கணவனை விட்டு பிரிந்து, தனது தாய் ஜெயரூபா வீட்டில் குழந்தைகளோடு சுமித்திரா வசித்து வந்தார்.

இந்த சூழலில் கடந்த 21ஆம் திகதி சுமித்திரா தனது தாய் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை ஜெயரூபா பல இடங்களில் தேடிவந்த நிலையில், சுமித்திரா, கவரைப்பேட்டையில் உள்ள ஒருவருடன் வசித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து கடந்த 13ம் திகதி கவரைப்பேட்டைக்கு சென்ற ஜெயரூபா, தனது மகள் சுமித்திராவை அங்கிருந்து தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். மேலும், 2 குழந்தைகள் உள்ள நிலையில் அவர்களை விட்டு வேறு யாருடனோ சென்று வசிப்பது தவறு என்று கூறி கண்டித்து சுமித்திராவை, ஜெயரூபா வீட்டுக்கு அழைத்து உள்ளார்.

இதனால் தாய் மீது ஆத்திரத்தில் இருந்து வந்த சுமித்திரா, நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த போது, திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது வலியால் துடித்த சுமித்திராவின் அலறல் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த ஜெயரூபா மற்றும் அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் ஓடி வந்து சுமித்திராவின் உடலில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். அதன் பின்னர், உடனடியாக அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!