தடுப்பு முகாமுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட இராணுவ அதிகாரிக்கும் கொரோனா!

இராணுவ அதிகாரி ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவ தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா இதனை, உறுதிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் இருந்து நாடும் திரும்பும் பயணிகளை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தடுப்பு முகாமுக்கு அனுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கே இந்த வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!