புதிதாக நால்வருக்கு கொரோனா – மீண்டும் பீதியில் இலங்கை!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நான்கு பேர் நேற்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. 48 மணிநேரத்துக்கு மேலாக புதிதாக எவருக்கும் தொற்றுக் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததால் நிம்மதியடைந்திருந்த சுகாதாரத் துறையினர், இதனால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அத்துடன், 237 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!