பிரான்சில் யாழ்ப்பாண இளைஞன் கொரோனாவுக்குப் பலி

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவரும் உயிரிழந்துள்ளார். தாவடி, கொக்குவில் வேம்படி முருகமூர்த்தி கோயிலடியைச் சேர்ந்த குணரட்ணம் கீர்த்திகன் (கீர்த்தி- வயது 32) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

பிரான்சில் கிறித்தை பகுதியில் வசித்து வந்த இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் இவருடைய மனைவி 5 மாதக் கர்ப்பிணியாக உள்ளார்.

அண்மையில் சுவிஸ் நாட்டிற்கு சென்று திரும்பிய இந்த இளைஞனுக்கு நீரிழிவு நோயும் இருந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

14 நாட்கள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, நோய் அதிகரித்த நிலையில் 8 தினங்கள் மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் இருந்துள்ளார்.

இறுதியாக மனைவியை மட்டும் பார்க்க மருத்துவர்கள் அனுமதித்தனர். இவருடைய உடலை குடும்பத்தினரிடம் கையளிக்கவும் அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!