அனலைதீவில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி! – ரஸ்யா சென்று திரும்பியவர்

யாழ்ப்பாணம் – அனலைதீவு பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகத்தில், ஒருவர், கடற்படையினரின் உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை குறித்த நபர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அனலைதீவு பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறித்த நபர் ரஸ்யாவுக்கு சென்று வந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்று சுகாதார துறையினரால் சந்தேகிக்கப்படுகிறது. அவரை யாழ்.போதனை வைத்தியசாலையில் அனுமதிக்க கடற்படையினரின் உதவி கோரப்பட்டிருந்த போதும் உரிய நேரத்தில் அவரிகளின் உதவி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!