இலங்கையில் கொரோனா மரணம் 5 ஆக உயர்ந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் இன்று காலை உயிரிழந்தார். வெலிக்கந்த கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 44 வயதுடைய ஒருவரே உயிரிழந்தவர் ஆவார். அவர் இத்தாலியில் இருந்து திரும்பிய நிலையில், கொரோனா தொற்றுக்கு உள்ளானார். இவர் உயிரிழந்ததை அடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!