24 மணித்தியாலங்களில் 1107 பேர் கைது!

ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்ட 1,107 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றுக்காலை 6.00 மணி தொடக்கம் இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இவர்களிடமிருந்து 326 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதேவேளை, மார்ச் மாதம் 20 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 15,902 பேர், ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட மொத்த வாகனங்களின் எண்ணிக்கை 3,991 என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!