கனடாவில் ஒரு நாளில் 82 பேர் பலி! – 2142 பேருக்கு புதிதாக தொற்று

கொரோனா வைரஸ் தொற்றினால், கனடாவில் ஒரு நாளில், 82 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் கூறுகின்றன. நேற்று மாலை 5 மணி வரை கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை வரை 258 பேர் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று இந்த எண்ணிக்கை 340 ஆக உயர்ந்தது. அதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையும்,14,426 இல் இருந்து 16,568 ஆக அதிகரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!