சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதிக்கு சாபமிட்ட வழக்கறிஞர்

தனக்கு சாதகமாக தீர்ப்பளிக்காத நீதிபதியை ”உனக்கு கொரோனா வைரஸ் வரனும், அதில் நீ சாக வேண்டும் என” சாபமிட்ட வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவைச் சேர்ந்த வழக்கறிஞர் பிஜாய் அதிகாரி, தனது கட்சிக்காரரின் பேருந்தை வங்கி கடனுக்காக ஜப்தி செய்ய வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது ஜப்தி நடவடிக்கையை நிறுத்த கோரி கோல்கட்டா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கு நீதிபதி திப்னாகர் தத்தா முன் விசாரணைக்கு வந்தது, நீதிபதி கூறியது, இது அவசர வழக்கு அல்ல, ஊரடங்கு காரணமாக அவசர வழக்கு என்றால், வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரிக்கலாம், இது அப்படியல்ல என கூறி விசாரிக்க மறுத்தார்.

இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர், தனக்கு சாதகமான தீர்ப்பு வழங்காததால், நீதிபதியை நோக்கி ”உனக்கு கொரோனாவரனும், அதி்ல் நீ சாகனும் ” என உரக்க சத்தமிட்டவாறு சாபமிட்டார்.

நீதிமன்ற கன்னியத்தை மீறி நீதிபதியை அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் பிஜாய் அதிகாரி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர நீதிபதி உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!