குடாநாட்டை விட்டு இரகசியமாக வெளியேறும் மக்கள்! – பாதுகாப்பு அதிகரிப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக, படையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு,மன்னார் மாவட்டங்களுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து காடுகள் ஊடாகவும் கடற்கரையோரமாகவும் மக்கள் வெளியேறிச் செல்வதாக கிடைத்த தகவலை அடுத்தே படையினர் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!