ஊரடங்கு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணம், கொழும்பு, கம்பஹா, கண்டி, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று இன்று (08) சற்றுமுன் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் ஏனைய 19 மாவட்டங்களில் நாளை (09) மற்றும் எதிர்வரும் (14) ஆகிய தினங்களில் காலை 6 மணி முதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!