வாய் பேச முடியாத மகனை எரித்துக் கொன்ற தந்தை: – அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தியாவில் மன வளர்ச்சி குன்றிய மகனை எரித்துக் கொன்றது ஏன் என தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார். நாசரேத் அருகே பாட்டக்கரை கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துக்குமார்(வயது 40), இவரது மனைவி சிவகனி. இவர்களுக்கு சத்யகோமதி, மீனாட்சி கீர்த்தனா என இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஹரி பிரசாத் என்ற 14 வயதான மன வளர்ச்சி குன்றிய மகன் இருக்கிறான்.

ஹரி பிரசாத்தை, முத்துக்குமார் திட்டமிட்டு தீ வைத்து எரித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.இதன் விபரம் பின்வருமாறு,நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த முத்துக்குமார் கட்டிலுக்கு தீ வைத்துள்ளார், கட்டிலில் ஹரி பிரசாத் படுத்திருந்துள்ளார்.

இதில் ஹரி பிரசாத் பரிதாபமாக உடல் கருகி இறந்துள்ளது, இதற்கிடையே வெளியூர் சென்றிருந்த சிவகனி வீட்டுக்கு வந்த பார்த்த போது மகன் சடலமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.உடனடியாக பொலிசுக்கு தகவல் அளிக்க விரைந்து வந்த அதிகாரிகள், ஹரி பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து முத்துக்குமாரை பொலிசார் கைது செய்ததுடன் அவர் அளித்த வாக்குமூலத்தில், ஹரி பிரசாத் மன வளர்ச்சி குன்றியவன், காது கேட்காது, வாய் பேசவும் முடியாது. பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருந்தான், பல இடங்களில் மருத்துவம் பார்த்தும் பலனில்லை.

மேற்கொண்டு சிகிச்சை அளிக்கவும் என்னிடம் பணமில்லை, இந்நிலையில் எனக்கும் என் மனைவியின் அண்ணனுக்கும் பகை இருந்தது. இதுதொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், ஹரி பிரசாத்தை கொலை செய்து பழியை அவர் மீது போட நினைத்து கட்டிலுக்கு தீ வைத்தேன். வாய் பேச முடியாததால் தீயில் கருகி இறந்தான், தப்பியோடிய என்னை பொலிசார் கைது செய்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!