ஈபிடிபியை தாக்கிய சிறி டெலோ!

மதுபோதையில் சிறீடெலோ உறுப்பின‌ர் தன்னைத் தாக்கியதாக, வ‌வுனியா தெற்கு தமிழ் பிர‌தேச‌ ச‌பையின் ஈ.பி.டி.பி உறுப்பினரான துஸ்யந்தன் விக்டர் ராஜ் பொலிஸில் முறையிட்டுள்ளார்.

நேற்று மாலை உக்கிளாங்குளத்தில் உள்ள ஈ.பி.டி.பி யின் தமிழ் தெற்கு பிரதேசசபை உறுப்பினரான துஸ்யந்தனின் வீட்டிற்கு சென்ற மற்றுமொரு பிரதேசசபை உறுப்பினரான சிறிடெலோ கட்சியின் முக்கியஸ்தரான அதிஸ்டசெல்வ‌ம் அவ‌ரது இர‌ண்டு ம‌க‌ன்மார் உட்ப‌ட‌ சிறீடெலோ இளைஞ‌ர் அணியின‌ர் வீடு புகுந்து தாக்கியதாக வவுனியா பொலிஸில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டின் யன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளதுடன் துஸ்யந்தன் விக்டர் ராஜ் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் துஸ்யந்தன் விக்டர் ராஜ் கருத்து தெரிவிக்கையில்,

அருட்செல்வம் ஒப்பந்தங்கள் செய்து வருவதாகவும் அதில் ஏற்படும் ஊழல் தொடர்பில் தான் சுட்டிக்காட்டி ஒப்பந்தங்களை சமூக அமைப்புக்கள் ஊடாகவே வழங்க வேண்டும் என தெரிவித்து வருவதனாலேயே தன்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

அவர்கள் பெண்கள் மற்றும் வர்த்தகர்களை போல் முகநூல்களில் அசிங்கமாக சித்திரித்து வருபவர்கள் எனவும், தனது குடும்ப பெண்கள் தொடர்பாக அவர்கள் போலி முகநூல்களில் எழுதியதாகவும் குற்றம்சாட்டியதுடன், சிறிடெலோ கட்சியினர் தனது வாகனம் மீதும் அண்மையில் தாக்குதல் நடத்தியிருந்தனர் எனவும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!