பனையில் இருந்து தவறி விழுந்தவர் சாவு!

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில் பனை மரத்தில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த சீவல் தொழிலாளி ஒருவர், நேற்று உயிரிழந்தார். உயரப்புலம் இளவாலை பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் சிவகுமார் (வயது 43) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவர் ஆவார்.

கடந்த 17 ஆம் திகதி இளவாலை பகுதியில் உள்ள பனை மரத்தில் கள்ளு சீவுவதற்காக இவர் மரம் ஏறியுள்ளார். பனை மரத்தின் வட்டுக்குள் இருந்து கள்ளு சீவிக் கொண்டு இருந்தபோது கால் சறுக்கி கீழே விழுந்துள்ளார்.

மயக்கமடைந்த நிலையில் உடனடியாக தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மதியம் மரணமானார்.

இறப்பு தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!