பாடசாலைகள் மே 11 திறக்கப்படாது?

பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகளை, மே 11ஆம் திகதி திறக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு மற்றும் பிற இடங்களில் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. இதையடுத்தே, கல்வி நிறுவனங்களை மீளத் திறப்பது தொடர்பான முடிவை மறுபரிசீலனை செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைகளின் பேரில் மட்டுமே, பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பது தொடர்பான எந்தவொரு முடிவும், எடுக்கப்படும் என்றும், அமைச்சர் பந்துலக குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன், அது குறித்து முடிவெடுப்பதற்கு பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!