கொரோனா தடுப்புப் பணியின்போது உயிரிழப்பவருக்கு 50 இலட்சம் இழப்பீடு – முதல்வர்!

கொரோனா வைரஸ் தடுப்புப் பணியின்போது வைத்தியத் துறையினர் தொற்று ஏற்பட்டு துரதிஷ்டவசமாக இறக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஆலோசனைக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த அறிப்பை வெளியிட்டார்.

அவர் கூறுகையில், “கொரோனா தடுப்புப் பணியின்போது தொற்று ஏற்பட்டு மருத்துவர்கள் இறந்தால் 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும். மருத்துவத் துறை மட்டுமின்றி பொலிஸ் துறை, உள்ளாட்சி, தூய்மைப் பணியாளர்கள் உட்பட அனைத்துத் துறை பணியார்களில் எவரும் இறந்தால் அவர்களின் குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.

உயிரிழக்கும் மருத்துவர்கள் உட்பட அனைத்துத் துறை பணியாளர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும். கொரோனா தடுப்பு பணியின்போது அரசு மற்றும் தனியார் பணியாளர்கள் இறந்தால், அவர்களின் பணியை பாராட்டி விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். உயிரிழக்கும் பணியாளர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்படும்” என்று அறிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!