தப்பி வந்த இரண்டாமவரும் அடையாளம் காணப்பட்டார்!

கொரோனா அச்சுறுத்தல் அதிகமாகக் காணப்படும் கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்த சுழிபுரம் – தொல்புரம் முத்துமாரி அம்மன் ஆலய வீதியைச் ஒருவர், லொறி மூலம், யாழ்ப்பாணம் வந்திருந்ததை வலி.மேற்கு பிரதேச சுகாதார பரிசோதகர்கள், முதலில் கண்டறிந்து, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தினர்.

இதையடுத்து, இரண்டாவது நபர், நேற்று மாலை சங்கானை தேவாலய வீதியில் கண்டறியப்பட்டு, அவரது வீட்டில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கொழும்பு டாம் வீதியில் தங்கியிருந்து மேசன் வேலை செய்து வந்ததாகவும், மிளகாய் ஏற்றி வந்த லொறியில் ஏறி நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்து சேர்ந்ததாகவும், அவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். எனினும் அவரது கூற்றில் சந்தேகங்கள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பில் இருந்து முறையான அனுமதி பெறாமல் ஆட்களை ஏற்றி வந்த லொறிகளின் சாரதிகள் தொடர்பாக, சிறப்புப் பொலிஸ் அணி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!