யாழ்ப்பாணம் வந்த செத்தல் வியாபாரிகளுக்கு கொரோனா சோதனை!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்று, செத்தல் மிளகாய் விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவர் நேற்று சுகாதார பரிசோதகர்களால் விசேட கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கொழும்பிலிருந்து சிறிய லொறியொன்றின் மூலம் செத்தல் மிளகாயைக் கொண்டுச் சென்ற இவர்கள், சுழிபுரம் பகுதியில் விற்பனையில் ஈடுபட்டதாக கிடைத்த தகவலுக்கமைய, சுகாதார அதிகாரிகள் இவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!