முகக்கவசம் அணியாத மக்களை எச்சரிக்கும் நடவடிக்கையில் பொலிஸ்

உடல் நிலையில் கவனம் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமே உபயோகித்துக் கொண்டிருந்த மாஸ்க், தற்போது உலகளவில் அனைவராலும் பயன்படுத்தப்படுகிறது.

கொரோனா வைரஸிடமிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காக சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் மாஸ்க் அணிந்து கொள்கிறார்கள்.

இலங்கையில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணியுமாறு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்திருந்த போதிலும் பொரும்பாலன மக்கள் அரசாங்கத்தின் உத்தரவினை பொருட்படுத்தாது மாஸ்க் அணியாது செல்வதனையடுத்து வவுனியா மாவட்ட கொரோனா தடுப்பு பொலிஸ் பிரிவினர் இன்று (24) வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மாஸ்க் அணியாமல் செல்பவர்களை மறித்து எச்சரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு மாஸ்க் அணியாது செல்பவர்களை எச்சரிப்பது மாத்திரம் அல்லாது அவர்களது வாகனத்தினை அவ்விடத்திலேயே நிறுத்தி விட்டு மாஸ்க் வாங்கி அணிந்து வந்து வாகனத்தினை எடுத்துச் செல்லுமாறும் பொலிஸார் பொதுமக்களுக்கு பணிப்புரை விடுத்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!