மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட கொரோனா நோயாளி!

கர்நாடகா மாநிலத்தில் சிறுநீரக பிரச்சினை காரணமாக 50 வயது நபர், கடும் சுவாச கோளாறுடன் கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், மருத்துவமனையின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!