இதுவரை 690 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 25 பேர் நேற்று கண்டறியப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 690ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுக்குள்ளான, 521 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இதுவரையில் 162 பேர் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!