யாழ்ப்பாணத்தில் நடத்திய சோதனையில் மற்றொருவருக்கு தொற்று உறுதி!

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட- முழங்காவிலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் ஒருவருக்கு, நேற்று கோரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த, ஜா எல பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவருக்கே, கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!