925 ஆக உயர்ந்தது கொரோனா தொற்று!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியவர்களின் எண்ணிக்கை 925 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளான 471 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 108 பேர் சந்தேகத்துடன் கண்காணிப்பு நிலையில் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நேற்று தொற்றுக்குள்ளானவர்களில் 8 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!