தேர்தலுக்காக மனித உயிர்களை விலையாக கொடுக்கமுடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர்

தமது ஆணைக்குழு பொதுத்தேர்தலை நடத்த தயாராக உள்ளது.எனினும் அதற்காக மனித உயிர்களை விலையாக கொடுக்கமுடியாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் செயலாளர்களை கடந்த செவ்வாய்க்கிழமையன்று சந்தித்தபோது அவர் இந்தக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

தேர்தல்கள் நடத்தப்படாது போனால் மக்களின் இறையாண்மை மறுக்கப்படுவதாக அமையும். இறையாண்மை மக்கள் தவிர்க்கமுடியாத உரிமையாகும்.

எனினும் மக்களின் இறந்த உடல்களின் மீது தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை நடத்தாது என்று தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்

நீதித்துறை மற்றும் கொரோனா வைரஸ் உட்பட்ட பல காரணிகளால் தமக்கு நெருக்குதல் உள்ள நிலையில் தேர்தலை நடத்தவேண்டியுள்ளது என்று குறிப்பிட்ட அவர் யூன் 20 இல் தேர்தல் நடக்குமா? என்பதை அறுதியிட்டு கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!