பிறந்து ஐந்தே நாள்! குழந்தையின் கால்களைப் பிடித்து தரையில் ஓங்கி அடித்து கொலை செய்த தந்தை மற்றும் பாட்டி

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பிறந்து 5 நாள் ஆன குழந்தையை கணவரும், மாமியாரும் சேர்ந்து கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டுத்தெரவைச் சேர்ந்த தவமணி. இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் நான்காவதாக பெண் குழந்தை ஒன்று கடந்த 5 நாளைக்கு முன்பு பிறந்துள்ளது.

இந்நிலையில் அந்த பெண் குழந்தை திடீரென இறந்துவிட்டதையடுத்து, குடும்பத்தினர் அக்குழந்தையின் இறுதிச்சடங்கினை முடித்துள்ளனர்.

பின்பு தகவலறிந்து வந்த பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது தவமணி மற்றும் தவமணியின் தாயார் பாண்டியம்மாள் இருவரும், “நாங்கள் தான் குழந்தையை கொன்று புதைத்தோம்” என்று கூறி அதிர வைத்துள்ளனர்.

மேலும் விசாரித்த போது, சித்ரா குழந்தையை தூங்க வைத்துவிட்டு, வெளியில் மற்ற குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த தருணத்தில் கள்ளிப்பாலை வாயில் ஊற்றியதோடு, குழந்தையின் கால்களைப் பிடித்து தரையில் ஓங்கியும் அடித்துள்ளனர். இதில் பலத்தகாயம் ஏற்பட்டு இறந்த குழந்தையை உடல்நலம் பாதிப்பால் இறந்துள்ளதாக கூறி மக்களை நம்பவைத்துள்ளது அம்பலமாகியுள்ளது.

தற்போது குற்றத்தினை ஒப்புக்கொண்ட குழந்தையின் தந்தை மற்றும் பாட்டி இருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!