லண்டனில் உள்ள மகளிடம் இணையத்தின் மூலம் பேச அனுமதி கோரிய நளினி: மறுத்த தமிழக அரசு!

வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி மற்றும் முருகன் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினியின் தாயார் பத்மா ஆட்கொணர்வு வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் இருவரும் இலங்கையில் உள்ள முருகனின் தாயார் சோமனியம்மாளிடம் தினமும் 10 நிமிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

மேலும், முருகன் லண்டனில் உள்ள மகள், சகோதரியுடன் பேச அனுமதிக்க வேண்டும். ஏற்கனவே காலமான தனது தந்தையின் உடலை வீடியோ கால் மூலம் பார்க்க முருகனுக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பி.டி.ஆஷா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் வாட்ஸ்அப் காலில் பேசுவதற்கு அனுமதிப்பதில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, நளினி, முருகனை வாட்ஸ் அப் மூலம் உறவினர்களிடம் பேச அனுமதிக்க முடியாது, ஏனெனில் சிறை விதிகளில் இதற்கு அனுமதி இல்லை. வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பேச சிறை விதிகளில் அனுமதி இல்லை இல்லை திட்டவட்டமாக கூறியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!