சனிக்கிழமை முதல் அமுலாக்கப்படும் நாடு முழுதுமான ஊரடங்கு சட்டம்.

ஜுன் 6 ஆம் திகதி சனிக்கிழமை முதல் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் நீக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தினை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், முன்னர் போன்று இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருக்கிறது.

இதேவேளை முன்னர் அறிவிக்கப்பட்டதைப் போன்று, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று இரவு பத்து மணிக்கு அமுலாகும் ஊரடங்குச்சட்டமானது, நாளை வியாழக்கிழமை (4) மற்றும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (5) முழு நேரமும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருக்கிறது.

இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!