பிரித்தானியாவில் நடந்த கொடூரம்: கருப்பின சிறுவனை தங்களது காலணியை முத்தமிடும்படி மிரட்டிய மாணவர்கள்!

பிரித்தானியாவில் கருப்பின சிறுவனை மண்டியிட்டு தங்களுடைய ஷுவிற்கு முத்தமிடும் படி இனவெறி ரீதியில் நடந்து கொண்ட இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவின் West Yorkshire-ன் Huddersfield-க்கு அருகில் இருக்கும் Holmfirth Cricket Club-ல் இந்த வாரத்தின் துவக்கத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில், ஆண் மற்றும் பெண் என இரண்டு வெள்ளை நிற நபர்கள், அங்கிருக்கும் கருப்பு நிற பையன் ஒருவனை, மண்டியிட்டு தங்கள் காலில் இருக்கும் ஷுவினை முத்தமிடும் படி வற்புறுத்துகின்றனர்.

அதில் ஒரு கட்டத்தில், அந்த கருப்பின சிறுவனை முத்தமிடும் படி கூறி, அந்த நபர் அறைகிறார். அதன் பின் சுமார் 120 பவுண்ட் மதிப்பு கொண்ட புதிய ஷு இது, முத்தமிடு என்று இனவெறி ரீதியாக நடந்து கொள்கிறார். அருகில் இருக்கும் அப்பெண்ணும் முத்தமிடும் படி கூறுகிறார். சுமார் 45 நொடிகள் இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டதால், சுமார் 1.5 மில்லியன் பேர் பார்த்துள்ளனர். அதுமட்டுமின்றி குறித்து வீடியோவை பார்த்து பொலிசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு வந்தது.

இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சுமார் 17 வயதுடைய ஆண் மற்றும் 16 வயதுடைய பெண் என இரண்டு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக, West Yorkshire பொலிசார் தெரிவித்துள்ளனர். இனரீதியாக மோசமான பொதுவான தாக்குதல் என்ற சந்தேகத்தின் பேரில் 17 வயது சிறுவனும், இனரீதியாக மோசமான பொது ஒழுங்கு குற்றம் என்ற சந்தேகத்தின் பேரில் 16 வயதான சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!