வாக்குச்சீட்டுகளை அச்சிடுவது நிறுத்தப்பட்டதா?

பொதுத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில்உண்மை இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில், வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணி நேற்று முன்தினம் மதியத்துடன் நிறுத்தப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், வாக்குச் சீட்டுக்களை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறியுள்ளார்.

நாளைக்குள், ஆறு மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகள் முடிவடையும் என்று அரசாங் அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பிரதானி தமக்கு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் என்றும், அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!