யாழ் – கொழும்பு இடையிலான ரயில் சேவை ஆரம்பம்!

கொரோனா நிலைமை காரணமாக தடைப்பட்டிருந்த யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான புகையிரத சேவை இன்று (08) முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 5.45 மணிக்கு கொழும்பிற்கான முதலாவது சேவையும், 9.45 மணிக்கு இரண்டாவது சேவையும் ஆரம்பிக்கப்பட்டது என்று யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்தார்.

புகையிரத பயணத்துக்காக யாழ்ப்பாண புகையிரத நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வருவதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

புகையிர நிலையத்திக்குள் நுழையும் அனைவருக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படுகிறார்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!