79 இலட்சத்தை கொள்ளையடித்த மருத்துவர் – துரத்திப் பிடித்த பெண் பொலிஸ் அதிகாரி!

விளையாட்டுத் துப்பாக்கியைக் காட்டி கணக்காளரை அச்சுறுத்தி கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து 79 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்ற மருத்துவரை பொலிசார் துரத்திப் பிடித்துள்ளனர்.

கொழும்பு தேசிய மருத்துவமனையில் நேற்று மேலதிக வேலை நேர கொடுப்பனவு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த அறைக்குச் சென்ற மருத்துவர், ஒருவர் விளையாட்டு துப்பாக்கியைக் காட்டி, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி 70 இலட்சம் ரூபாவை கொள்ளையடித்துச் சென்றார்.

முச்சக்கர வண்டி ஒன்றில் தப்பிச் சென்ற அவரை, கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணியில் இருந்த பெண் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பொலிசார், துரத்திச் சென்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 33 வயதுடைய மருத்துவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில், பட்ட பின்படிப்புக்கான நிபுணருக்கான பயிற்சிகளைப் பெற்று வந்தவர் என்று தெரியவந்துள்ளது.

அவரிடம் இருந்து விளையாட்டுத் துப்பாக்கி மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்பனவற்றை மீட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!