ஜூன் 29ஆம் திகதியே தனியார் வகுப்புகளை ஆரம்பிக்க அனுமதி!

தனியார் கல்வி நிறுவனங்கள், ஜூன் 29ம் திகதியே திறக்க அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜூன் 15ம் திகதி முதல் நூறுக்கும் குறைந்த மாணவர்களுடன் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்களை நடத்த அனுமதி அளிக்கப்படும் என்று நேற்று மாலை அறிவித்திருந்த அரசாங்கம், ஓரிரு மணித்தியாலங்களில் அந்த அறிவிப்பில் மாற்றம் செய்துள்ளது.

இதுதொடர்பாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிவிப்பில், தனியார் கல்வி நிறுவனங்களில், வகுப்புக்களை ஜுன் 29ஆம் திகதி தொடக்கம் மீள ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!