கடற்படையினர் மீது தாக்குதல்- நான்காவது சந்தேக நபரும் கைது!

அனலைதீவில் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, நான்கு சந்தேக நபர்களை ஊர்காவற்றுறை பொலிசார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, ஏற்கனவே, மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், வேலணையைச் சேர்ந்த மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனலைதீவில் இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகலை தீர்த்து வைத்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, இரண்டு கடற்படையினர் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் காயமடைந்த கடற்படையினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து, கடற்படையினரை தாக்கியவர்களை கைது செய்வதற்காக அனலைதீவு முழுவதையும் முற்றுகையிட்டு, தேடுதல்கள் நடத்தப்பட்டன.

இதையடுத்து, ஊர்காவற்றுறை பொலிசார், நான்கு சந்தேக நபர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!