யாழ், கொழும்பு மாவட்டங்களுக்கு இரண்டு அடி நீள வாக்குச்சீட்டுகள்!

யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களுக்கு நீளமான வாக்குச் சீட்டு அச்சிடப்பட்டுள்ளதாகவும், கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு அகலமான வாக்குச்சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் கூறுகின்றன.

எதிர்வரும், ஓகஸ்ட் 5ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணிகள், அரசாங்க அச்சக திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நீளம் கூடிய மற்றும் அகலமான வாக்குச் சீட்டுகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணம், கம்பஹா மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகளே நீளம் கூடியவையாக இருக்கும் என்றும், இந்த வாக்குச் சீட்டுகள் 23 அங்குலம் நீளம் கொண்டதாக இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, வன்னி, திகாமடுல்ல மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள், அகலம் கூடியவையானதாக இருக்கும் என்றும், இவற்றின் அகலம், 9 அங்குலமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!