ஜனாதிபதி செயலணியால் ஜனநாயகத்துக்கு ஆபத்து!

ஜனாதிபதி உருவாக்கிய செயலணியால் ஜனநாயகத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என சட்டத்தரணி லால் விஜயநாயக்க தெரிவித்துள்ளார். மேலும்,

‘இராணுவமயப்படுத்தலினையும், அரசமைப்பிற்கு வெளியே அமைப்புகளை உருவாக்குவதற்குமான முயற்சி இதுவென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முப்படையினர் பொலிஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய, பரந்துபட்ட அதிகாரங்களை உடைய செயலணி உருவாக்கம் குறித்து ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள் ஆழ்ந்த கவலையடைந்துள்ளனர்.

இது இலங்கையின் அரசமைப்பின் கீழ் நாட்டை நிர்வகிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அரசஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கை இழப்பிற்கான அறிவித்தலிற்கு சமமானது’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!