வல்லை வெளியில் வெடிப்புச் சம்பவம் – இராணுவ அதிகாரி காயம்!

யாழ்ப்பாணம் –வல்லைவெளிப் பகுதியில் இராணுவ அதிகாரி ஒருவர் வெடிப்புச் சமபவம் ஒன்றில் காயமடைந்துள்ளார் என்று நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வல்லை இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ அதிகாரி ஒருவரும் இராணுவச் சிப்பாய்கள் இருவரும் நேற்று மாலை 6.30 மணியளவில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் விழுத்திவிட்டுச் சென்ற பொதியை அவதானித்த இராணுவ அதிகாரி, பொதியை பிரிக்க முற்பட்டபோது அது வெடித்துச்சிதறியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த அதிகாரி இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என்று கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!