வாகனங்களை பறிமுதல் செய்யக் கூடாது! – ஜனாதிபதி கண்டிப்பான உத்தரவு

தவணைக் கொடுப்பனவை செலுத்தாதவர்களின் வாகனங்களை நிதி நிறுவனங்கள், பறிமுதல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

தவணைக் கொடுப்பனவை செலுத்தாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக, குத்தகை நிறுவனங்களிடமிருந்து கிடைக்கும் முறைப்பாடுகளை மறுஅறிவித்தல் வரை ஏற்றுக்கொள்ள வேண்டாம் எனவும், பதில் பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக குத்தகை கடன் தவணைகளை ஆறு மாதங்களுக்கு ரத்து செய்யுமாறு ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன், கடந்த மார்ச் 23 ஆம் திகதி சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், கடன் தவணைகளை செலுத்தத் தவறிய வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயல் எனவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கடன் தவணைகளை செலுத்தத் தவறும் பட்சத்தில் வாகனங்களை பறிமுதல் செய்ய இடமளிக்க வேண்டாம் என்றும், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!