விக்னேஸ்வரன் தமிழ் மக்களிடம் பணம் கேட்டு கையேந்தி மரியாதை கெடுவதை விடுத்து தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ள அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, விக்னேஸ்வரன் தனது கட்சிக்கு வந்தால் தலைவர் பதவியை வழங்குவதற்கு எப்போதும் தயாராகவே இருக்கின்றேன் என்றும் அதற்கான அழைப்பினை இன்றும் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோயிலடியில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று (15) அவர் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘எங்களுக்கும் நிதியின் தேவை உள்ளது. நான் இல்லை என்று சொல்லவில்லை. விக்னேஸ்வரனை எனது கட்சியில் வந்து இணையுமாறு அழைப்பை விடுகின்றேன். அவர் இப்பொழுதே வந்து எனது கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும்.
அதைவிடுத்து தேவையில்லாமல் பணத்தினை சேகரித்து உங்கள் கட்சியின் மானத்தை வாங்கிக் கொள்ளாதீர்கள் என்று விக்னேஸ்வருக்கு ஆலோசனை கூறுகிறேன். அவரின் கட்சியில் இருந்து எவராவது எங்களுடைய ஆதரவினை நாங்கள் வழங்க தயாராக இருக்கின்றோம்.’ – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!