மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்: எக்ஸ்ரேவைப் பார்த்து அதிர்ந்த மருத்துவர்கள்!

குடும்ப தகராறில் மனைவியைக் கத்தியால் கணவர் குத்தியதால், கத்தி 6 அங்குலத்திற்கு நெஞ்சுப்பகுதியில் இறங்கியுள்ளதை 30 மணி நேர போராட்டத்திற்கு பின்பு மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கொட்ட ராஜா நகரைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மனைவி மல்லிகா. கடந்த மாதம் 25-ந் தேதி இவருக்கும் வேறு ஒரு நபருக்கும் நடந்த குடும்ப சண்டையில், அந்த நபர் மல்லிகாவைக் கத்தியால் குத்தியுள்ளார். பின்பு அலறிய படி சரிந்து விழுந்த மல்லிகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அங்கு எக்ஸ்ரே எடுத்துப்பார்த்த மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம் அவரது நெஞ்சுப் பகுதியில் 6 அங்குல அளவிற்கு கத்தி இறங்கியுள்ளது. 1 அங்குல கைப்பிடி மட்டும் வெளியே இருப்பதை அவதானித்துள்ளனர். இந்த சூழ்நிலையில் கத்தியானது நுரையீரல் தவிர மற்ற உறுப்புகளைப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள்.

எனவே அறுவை சிகிச்சை செய்து கத்தியை அகற்ற மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். உடனே 30 மணி நேர போராட்டத்திற்குப் பின்பு கத்தியை வெளியே அகற்றியுள்ளனர். மேலும் நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பும் சரி செய்யப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!