தமிழகத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட 3 லொறிகள்: – மூன்று பேர் பலியான கோர சம்பவம்!

தமிழகத்தில் ஒரே இடத்தில் மூன்று லொறிகள் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், 3 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தருமபுரியில் இருந்து செங்கல் ஏற்றிக்கொண்டு வந்த லொறி ஒன்று, கீரனூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது, காரைக்குடியில் இருந்து அரிசி ஏற்றிக் கொண்டு வந்த லொறி ஒன்றுடன் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

அதே நேரத்தில், அரிசி லொறியின் பின்னால் வந்துகொண்டிருந்த மற்றொரு லொறியும் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர்கள் சாதிக், கலையரசன் மற்றும் கிளீனர் என மூன்று பேர் பரிதாபமாக மரணமடைந்தனர்.< இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர், ஜே.சி.பி இயந்திரத்திரன் உதவியுடன் லொறிகள் உடைக்கப்பட்டு 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. பின்னர், பிரேத பரிசோதனைகாக அவர்களின் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விபத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த கோர விபத்தினால் அரிசி மூட்டைகளும், செங்கற்களும் சாலையில் சிதறிக் கிடந்தன. இதனைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!