வேட்பாளர் நழுவினார் – கூட்டத்தில் பங்கேற்ற 10 பேர் கைது!

ஈபிடிபியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட 10 இளைஞர்கள் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நல்லூர் பகுதியில் வேட்பாளர் ரெமிடியஸ் நேற்று மாலை இளைஞர்களை அழைத்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார். இதன்போது சம்பவ இடத்திற்கு சென்றிருந்த பொலிசார் கலந்துரையாடலில் பங்கேற்ற 10 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

பொலிசார் இளைஞர்களை கைது செய்த போது, வேட்பாளர் ரெமிடியஸ், அங்கிருந்து விலகிச் சென்று விட்டார் என்றும் கூறப்படுகிறது. சுகாதார வழிகாட்டு முறைகளை பின்பற்றாததாலேயே குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!