லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-சீன படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு படைகளையும் விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையின்போது, இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் தமிழக வீரர் பழனி உள்பட 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தாக ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. மேலும் சிலர் பலத்த காயமடைந்திருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த வீரர்களின் பெயர்கள் வெளியாகி உள்ளன.
1. கே.பழனி (தமிழ்நாடு)
2. சுனில் குமார்
3. நந்துராம்
4. சி.கே.பிரதான்
5. ராஜேஷ் ஓரான்
6. கே.கே.ஓஜா
7. கணேஷ் ராம்
8. கணேஷ் ஹஸ்தா
9. சந்தன் குமார்
10. தீபக் சிங்
11. அமான் குமார்
12. குந்தன் குமார்
13. சத்னம் சிங்
14. மன்தீப் சிங்
15. ஜெய் கிஷோர் சிங்
16. பிபுல் ராய்
17. குர்தேஜ் சிங்
18. அங்குஷ்
19. குர்வீந்தர் சிங்
20. சந்தோஷ் பாபு
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!