யாழில் 10 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம் – ருவன்

யாழ்ப்பாண மாவட்ட பாதுகாப்புப் படையினரால் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட பொது மக்களின் காணிகள் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டம் தொடர்பாக இன்று (18) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும்,

எதிர்காலத்திலும் பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக நாம் ஆராய்ந்து வருகின்றோம். தற்போதைய நிலைமையில் காணி விடுவிப்பு தொடர்பாக எவ்விதமான முடிவும் எடுக்கப்படவில்லை. – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!