கருணா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஓமல்பே சோபித தேரர் முறைப்பாடு!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

ஆனையிறவில் ஒரே இரவில் 2000, 3000 இராணுவத்தினரைத் தான் கொன்றதாக, தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கருணா வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கருணாவிடம் விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கோரி, தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் மற்றும் மேற்படி அமைப்பின் உறுப்பினர்கள் நேற்று பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!