கோத்தா களமிறங்குவதில் எவ்வித சிக்கலுமில்லை – எஸ்.பி

கோத்தபாய ராஜபக்ஷ இரட்டை பிரஜாவுரிமை உடையவராக இருந்தாலும் அவர் இலங்கை பிரஜை என்ற ரீதியில் தேர்தலில் போட்டியிட உரிமை உடையவர் ஆகவே அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் எவ்வித சிக்கலும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையில் பிறந்த அனைவருக்கும் உள் நாட்டில் அரசியலில் ஈடுப்பட உரிமையுள்ளது. அரசியல் சாசனத்தின் பிரகாரம் அது அடிப்படை உரிமையகவுள்ளது. இந்நிலையில் நாட்டின் பிரஜைகள் தேர்தலில் போட்டியிட தகுதியுடையவர்களாயின் கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை பிரஜை என்ற வகையில் தேர்தலில் போட்டியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லை.

நாட்டில் கடந்த மூன்று தசாப்தங்களாக இடம்பெற்று வந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அவர் நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக பங்களிப்புடன் செயற்படுவார் என்பதில் சந்தேகமில்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!