வேட்பாளரை மகிந்தவே முடிவு செய்ய வேண்டும்! – என்கிறார் டிலான்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பிலிருந்து யார் வேட்பாளராக போட்டியிடுவது என்பது தொடர்பில் இறுதி நேரத்திலேயே அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

பொரள்ளையில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். “எஞ்சியிருக்கும் 18 மாதங்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி பிரதமராக நியமிக்கப்பட வேண்டும். அத்துடன் அவர் தலைமையில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். மேலும், ஜனாதிபதி தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை அவரே முடிவு செய்ய வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!