கருணாவின் வரலாறு எல்லோருக்கும் தெரியும்! – சமாளிக்கிறார் பிரதமர்

முன்னாள் பிரதியமைச்சர் கருணா தெரிவித்த கருத்துக்கு விமர்சனம் தெரிவிப்போர்,புலிகளுக்கு ஆயுதம் மற்றும் நிதி வழங்கியவர் யார் என்பதை கூற தயங்குவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

கருணாவின் வரலாற்றை நாட்டு மக்கள் நன்கு அறிவர் என்று கூறிய அவர், சிங்கள மக்களுக்கும் சிங்கள இராணுவத்திற்கும் எதிராக தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதம் வழங்கியவர்களின் பிள்ளைகள் பழைய வரலாறு தெரியாதது போன்று பேசுவது கவலைக்குரிய விடயம் .

ராஜபக்‌ஷவினருக்கு சாப்பாடு கொடுத்ததற்காக சிறையில் அடைக்கப்பட்ட யுகமொன்று காணப்பட்டது. 2015 ஆம் ஆண்டின் பின்னர் சில அரசியல்வாதிகள் இவ்வாறு தான் கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள்.அரசியல்வாதிகள் சமூகம் குறித்து பரந்த அளவில் சிந்தித்து செயற்பட வேண்டும். உண்மையான தலைவருக்கு எத்தகைய சூழலிலும் தைரியமாக முகங்கொடுக்கும் ஆளுமை இருக்க வேண்டும்.

ஐ.தே.க இரு துண்டாகியுள்ளதை பார்த்தால் மீண்டும் திருத்தியமைக்க முடியாது என்றே தெரிகிறது. சஜித் இருக்கும் வரை அதனை ஒருபோதும் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!