செயலணிக்கு பொருத்தமான தமிழரை தேடுகிறதாம் அரசாங்கம்!

கிழக்கு தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில் தமிழர் ஒருவரை இணைத்துக் கொள்வதற்கு இணங்கியுள்ள அரசாங்கம், அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேடி வருவதாக பிரதமர் மகிந்த ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.

நேற்று தமிழ் ஊடகங்களின் பிரதானிகளைச் சந்தித்த பிரதமர் மகிந்த ராஜபக்ச, தொல்பொருள் முகாமைத்துவ செயலணியில் தமிழர் ஒருவரை உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது என்றும், தமிழ் பிரதிநிதி ஒருவரை செயலணியில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்குப் பொருத்தமான ஒருவரை தேடிவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!