கருணாவுக்கு சவால் விடுகிறார் சிவாஜிலிங்கம்!

விடுதலைப் புலிகளின் மேடையில் புலிகளை ஆதரித்து தான் பேசிய ஆதாரங்கள், எந்த காணாெளிகள் இருந்தாலும் அதனை வெளியிடுமாறு கருணா எனும் வி.முரளிதரனுக்கு சவால் விடுப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த சவாலை விடுத்தார்.

“செல்வம் அடைக்கலநாதனும் சிவாஜிலிங்கமும் விடுதலைப்புலிகளின் மேடையில் அவர்களுக்கு ஆதரவாக பேசிய காணொளிகளும் தன்னிடம் இருப்பதாகவும் அந்த காணொளிகளை வெளியிட்டால் இவர்களின் நிலை அதாே கதிதான் என கருணா கூறியிருந்தார்.

அவ்வாறு பேசியிருந்தால் நாம் அவற்றினை ஏற்றுக்கொள்வோம். உண்மையை கூறுவதற்கு தான் ஒருபோதும் பயப்பட போவதில்லை. மக்களின் நலனுக்காகவும் அவர்களின் விடுதலைக்காகவும் எந்த நேரத்திலும் சாவினை தழுவிக்கொள்ள தயாராக இருக்கிறேன்” – என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!