கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் மேலும் 196 பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

சற்று முன்னர் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய கந்தகாடு முகாமில் 252 பேருக்கு இதுவரையில் கொரோனா தொற்றியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொரோனா ரைவஸ் பரவல் வெகுவாக குறைந்து வந்த நிலையில், மீண்டும் அந்த எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!